Categories
Cinema News

’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message

’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message

Tamil cinema has often used humour and commercial entertainment as an effective way to address socially relevant issues, and ‘Nallapadam’ arrives in the same space with a distinctive premise that combines comedy, romance, sentiment and a strong social message. Directed by Praburam C, the film stars Dr. A. Harish in the lead, with Dhanalakshmi as the female lead, and is gearing up for its theatrical release on September 18, 2026.

The story revolves around Kumaran, a man whose entire world revolves around alcohol. While his mother stands by him, his sister Amutha strongly opposes his drinking habit, and his girlfriend makes every effort to change his ways. Meanwhile, a group of people who share his love for alcohol form an association and choose Kumaran as their leader. His life takes an unexpected turn when the government announces a nationwide ban on alcohol, leaving him to confront the challenge of living without the one thing that has defined his world.

What follows forms the crux of ‘Nallapadam’, as Kumaran finds himself caught in a series of humorous and unexpected situations while trying to deal with the new reality. The film also explores the impact of alcohol on individuals, families and society, bringing together humour, romance, sentiment, social awareness and mass-oriented entertainment. With its unusual premise and socio-commercial treatment, the film aims to deliver its message while keeping the entertainment quotient intact.

The film features Motta Rajendran, Kalki Raja, Rama and Priyadharshini alongside the lead cast. The technical team comprises iniyan j harris as cinematographer, B.R. Prakash as editor and Sagishna Xavier as music composer. Asmin has worked as a lyricist.

Produced by A. Alagupandian under the banner of Harish Cinemas, Nallapadam is distributed and released by Harish Cinemas. Directed by Praburam C, the film is set to reach theatres worldwide on September 18, 2026.

*நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!*

தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. C. பிரபுராம் இயக்கியுள்ள இப்படத்தில் டாக்டர் A. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மதுவுக்கு அடிமையான குமரனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரது தாயார் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி அமுதா, குமரனின் குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும் குமரனை அந்தப் பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.

இதற்கிடையே, குமரனைப் போலவே மதுவை விரும்பும் சிலர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி, குமரனை அதன் தலைவராகத் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவிக்கிறது. இதனால், தனது வாழ்க்கையாக இருந்த மதுவின்றி எப்படி வாழ்வது என்ற மிகப்பெரிய சவாலை குமரன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அதன்பிறகு குமரனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், புதிய சூழலை சமாளிக்க அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே ‘நல்லபடம்’.

மதுவால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இப்படம் பேசுகிறது. அதேசமயம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சமூக விழிப்புணர்வு மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் சமூக, வணிக அணுகுமுறையுடன் உருவாகியுள்ள இப்படம், பொழுதுபோக்கு அம்சத்திற்கு குறைவில்லாமல் சமூகக் கருத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் இனியன் J ஹாரிஸ் ஒளிப்பதிவாளராகவும், B.R. பிரகாஷ் படத்தொகுப்பாளராகவும், சகிஷ்ணா சேவியர் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். அஸ்மின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

ஹரிஷ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் A. அழகுபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஹரிஷ் சினிமாஸ் நிறுவனமே விநியோகம் செய்து வெளியிடுகிறது.

C. பிரபுராம் இயக்கியுள்ள ‘நல்லபடம்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 18 அன்று வெளியாகிறது.

Categories
Cinema News

“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி

“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரபாஸின் எளிமை மற்றும் தாராள மனப்பான்மை மட்டுமின்றி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்துள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார் குறிப்பாக பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த மட்டன் குறித்து பேசிய அவர், “பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜிதின் குலாட்டியின் முழுமையான பேட்டி – Variety India

பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

#Prabhas is one of those quintessential good guys,’ says #JitinGulati.

Having worked with #Prabhas for nearly 2 years on the film #Fauzi, @jitin0804 says the experience has only reinforced the superstar’s reputation in the industry.

I had heard that he’s a very generous man & a good human being. Now I’ve had that experience firsthand. He is one of those quintessential good guys who is always there, is the sweetest, is very generous, and is ready to help anyone.

We’ve been shooting for the last two years, and I have seen him helping so many people around him,” he says.

Apart from his magnanimity and humility, I have also tasted Prabhas’ home-cooked food that he’s so well-known for. I think that’s the best mutton I’ve ever had; I’m not exaggerating.

‘Prabhas is one of those quintessential good guys,’ says Jitin Gulati on his two-year-long association with ‘Fauzi’ co-star (EXCLUSIVE)

Categories
Cinema News

AVENGERS ENDGAME: ENCORE BOOKINGS NOW OPEN FOR IMAX

AVENGERS ENDGAME: ENCORE BOOKINGS NOW OPEN FOR IMAX, MARVEL STUDIOS PRESENTED IN INFINITY VISION AND OTHER PREMIUM FORMATS; FANS TO GET EXCLUSIVE LOOK AT AVENGERS: DOOMSDAY

Reassemble for the epic conclusion of the Infinity Saga on the big screen on 25th September across English, Hindi, Tamil and Telugu in all premium formats.

Marvel Studios opens bookings for Avengers Endgame: Encore for IMAX, Marvel Studios Presented In Infinity Vision, and premium formats including 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE, ahead of its theatrical release on 25th September 2026. Returning to Indian cinemas in English, Hindi, Tamil, and Telugu, Avengers Endgame: Encore will let audiences experience one of the most monumental cinematic events of all time on the big screen once again. The movie includes an exclusive look at the highly anticipated Avengers: Doomsday , which arrives in cinemas on 18th December

For fans looking to experience Avengers Endgame: Encore at its most spectacular, the film will be presented in IMAX, Marvel Studios Presents Infinity Vision, and other premium large formats. Infinity Vision-certified screens guarantee audiences an exceptional cinematic presentation, with larger screens, brighter images, and outstanding sound.

In Avengers Endgame: Encore, after devastating events wiped out half the world’s population, the remaining heroes struggle to move forward. Ultimately, they must come together to restore order and harmony in the universe and bring their loved ones back in a dramatic showdown against Thanos. The film is produced by Kevin Feige and directed by Anthony and Joe Russo. Louis D’Esposito, Victoria Alonso, Michael Grillo, Trinh Tran, Jon Favreau, James Gunn, and Stan Lee serve as executive producers.

Marvel Studios’ Avengers Endgame: Encore releases in IMAX, Marvel Studios Presented In Infinity Vision, and premium formats including 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE in English, Hindi, Tamil and Telugu on 25th September 2026.

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!

இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதி அத்தியாயத்தை மீண்டும் பெரிய திரையில் காணத் தயாராகுங்கள்! செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் வடிவங்களிலும் வெளியாகிறது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கான முன்பதிவு ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன்
உள்ளிட்ட 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE போன்ற பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் இந்திய திரையரங்குகளுக்கு வருகிறது.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிகர்கள் அனுபவிக்க இந்த வெளியீடு வாய்ப்பளிக்கிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் இதில் இடம்பெறுகிறது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்காக, இப்படம் ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் மற்றும் பல்வேறு பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் திரையிடல்களில் வெளியாகிறது. இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகள், பெரிய திரைகள், அதிக ஒளிர்வு கொண்ட காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அமைப்பு மூலம் ரசிகர்களுக்கு உயர்தரமான சினிமா அனுபவத்தை வழங்குகின்றன.

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தில், பேரழிவை ஏற்படுத்திய சம்பவங்களால் உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள் அந்த இழப்பிலிருந்து மீண்டு, தங்கள் வாழ்க்கையைத் தொடரப் போராடுகின்றனர். இறுதியில், உலகில் மீண்டும் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும், தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுக்கவும் அவர்கள் ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவாகிறது. இதற்காக அவர்கள் தானோஸூக்கு எதிரான பிரம்மாண்டமான இறுதிப் போரில் களமிறங்குகின்றனர்.

இப்படத்தை கெவின் ஃபெஜ் தயாரித்துள்ளார். ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ளனர். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சா, மைக்கேல் கிரில்லோ, டிரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன், 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO மற்றும் ICE உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

“Playing the Character of Manimegalai Was a Challenging Experience in ‘Enna Vilai’” – Actress Shashaa Shivakumar

“Playing the Character of Manimegalai Was a Challenging Experience in ‘Enna Vilai’” – Actress Shashaa Shivakumar

Actress Shashaa Shivakumar, who has been steadily making her presence felt with varied roles, is set to appear in a pivotal character in Enna Vilai, written and directed by Sajeev Pazhoor. The film marks a different experience for the actress, as she plays Manimegalai, a rural girl, for the first time. With the film all set for the theatrical release on September 17, Saasha shares how she prepared for the character even before stepping onto the sets and how the film offered her an opportunity to explore a completely different milieu.


Speaking about her role in Enna Vilai, Shashaa Shivakumar says, “Manimegalai is a very special character for me, as this is the first time I have played a rural girl. I prepared myself for the character even before going to the sets, which helped me understand and approach the role better. It was a completely different experience for me, and I am very happy to have got an opportunity like this through Enna Vilai.”

Shashaa Shivakumar also shares her experience of working alongside Karunaas and Nimisha Sajayan, describing the opportunity as a responsibility given their talent and commitment. She also praises director Sajeev Pazhoor for creating a comfortable working environment through his patient and respectful approach towards everyone on the sets.

“Karunaas sir is a wonderful actor, and Nimisha is extremely talented and hardworking. When you perform alongside actors like them, it naturally comes with a great sense of responsibility. Director Sajeev sir was always very patient and respectful with everyone on the sets, which made the experience very special. This was also my first time working with a Malayalam team, so it was a very different and enriching experience for me,” she adds.

Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.

The film features Karunaas, Nimisha Sajayan, Saasha, Vijayalakshmi Ahathian, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.

Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew includes Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing).

With its socially relevant premise and strong ensemble of performers, Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.

‘என்ன விலை’ திரைப்படத்தில் மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார்!

பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாஷா சிவகுமார், சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணான மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்துள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நடிப்பதற்காக, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்பே அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதாக ஷாஷா சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலில் பணிபுரிவதற்கான வாய்ப்பையும் இந்தப் படம் தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

‘என்ன விலை’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஷாஷா சிவகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “மணிமேகலை எனக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரம். ஏனெனில், நான் முதன்முறையாக ஒரு கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்பே இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது அந்த கதாபாத்திரத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அணுக எனக்கு உதவியது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. ‘என்ன விலை’ படம் மூலம் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மேலும், கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் ஷாஷா சிவகுமார் பகிர்ந்துள்ளார். அவர்களின் திறமை மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக, அவர்களுடன் இணைந்து நடிப்பது தனக்கு கூடுதல் பொறுப்புணர்வை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “கருணாஸ் சார் ஒரு அற்புதமான நடிகர். நிமிஷா மிகவும் திறமையானவர், கடினமாக உழைப்பவர். அவர்களைப் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது இயல்பாகவே நமக்கும் பொறுப்புணர்வு வந்துவிடும். இயக்குநர் சஜீவ் சார் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் எப்போதும் மிகவும் பொறுமையாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். மேலும், மலையாளத் திரையுலகை சேர்ந்தவர்களுடன் நான் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். எனவே, இது எனக்கு முற்றிலும் வித்தியாசமான மற்றும் கற்றல் அனுபவமாக இருந்தது” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Reviews

‘சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

‘சர்தார் 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Produced by Prince Pictures and Ivy Entertainment.

Starring – Karthi, SJ Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Yogi Babu, Rajisha Vijayan and others.
Directed – by P.S Mithran
Based on Story & Characters by P.S Mithran
Co Produced by – A. Venkatesh

‘சர்தார் 2’ கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இந்த முறை ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் தவறான பயன்பாடு அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் உயிரியல் ஆயுதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஸ்பை திரில்லர் கதையாக படத்தை எடுத்திருக்கிறார்கள்.

கதைப்படி ரா அமைப்பில் பணிபுரியும் கார்த்திக்கு பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் அவரது தந்தை சர்தார் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச கூலிப்படை தலைவனாக வரும் எஸ்ஜே சூர்யா ஒரு ஆபத்தான உயிரியல் ஆயுதத்தை கைப்பற்றி நாட்டையே அழிக்கும் திட்டத்தில் இறங்குகிறார். தந்தையை தேடும் கார்த்தி இந்த பிரச்சனையிலும் சிக்குகிறார். கடைசியில் தந்தையும் மகனும் இணைந்து நாட்டை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் முக்கிய கதை.

கார்த்தி அப்பா மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உடல் மொழி மற்றும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விமான சண்டை காட்சிகளில் கார்த்தியின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சில விமர்சனங்கள் அவரது நடிப்பை பாராட்டினாலும் முதல் பாகத்தில் இருந்த தந்தை மகன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு இந்த பாகத்தில் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றன.

எஸ்ஜே சூர்யா வில்லனாக தனது வழக்கமான பாணியில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர் பேசும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவரது கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் புதிதாக எதுவும் இல்லை என்றும் சில இடங்களில் அவரது நடிப்பு அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.

மாளவிகா மோகனனுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான சண்டை மற்றும் அதிரடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷிகா ரங்கநாத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜிஷா விஜயன் குறைவான காட்சிகளிலேயே வருகிறார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளில் பெரிய பலமாக இருக்கிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சேசிங் மற்றும் ஸ்பை திரில்லர் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக வேலை செய்கிறது.

படத்தொகுப்பு விஜய் வேலுகுட்டியின் முக்கியமான பலமாக இருக்கிறது என்று சில விமர்சனங்கள் பாராட்டியுள்ளன. பல கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்ட காட்சிகள் இருந்தாலும் அவற்றை இணைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார். ஆனால் படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடுவதால் குறிப்பாக இரண்டாம் பாதியில் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஒரு நல்ல சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை நேரடியாக விழிப்புணர்வு படமாக சொல்லாமல் ஸ்பை திரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய முயற்சி. ஆனால் கதையை சொல்லும் விதத்தில் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது. முதல் பாதி ஓரளவு விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் மற்றும் அதிகமான விளக்கங்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில், ‘சர்தார் 2’ முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்ப்புடன் சென்றால் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கார்த்தியின் நடிப்புக்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.

Categories
Reviews

‘மண்டாடி’ திரைப்பட விமர்சனம்

‘மண்டாடி’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Soori
Suhas
Mahima Nambiar
Sathyaraj
Mithun Jai Sankar
Ravindra Vijay
Bala Saravanan
Stun Siva
Rams
Padhman
Aadukalam Murugadoss
Kritika Balasubramanian
Krish Hassan
Rekha Kumanan
Arun Kumar M
& Others
CREW
Banner — RS Infotainment Pvt Ltd
Writer & Director — Mathimaran Pugazhendhi
Music Director — GV Prakash Kumar
Producer — Elred Kumar
Co-Producer — V Manikandan
Cinematographer — S R Kathir ISC
Editor — Pradeep E Ragav
Production Designer — D R K Kiran
Stunt Directors — Peter Hein, Dhilip Subbarayan, Mahesh Mathew
Dialogue — Ameer Jamal Khan, Mathimaran Pugazhendhi
Sound Mix — T Uday Kumar
Sound Design — Prathap K
VFX Head — R Harihara Suthan
Lyrics — Pa Vijay, Jayashree Mathimaran, Vaaheesan Rasaiya
Additional Writing — Elred Kumar, R Mohanavasanthan, Thiral Sankar
Costume Designer — Dinesh Manoharan
Dance Choreographer — Azar
Executive Producer — G Mahesh
Production Executive — S P Chokkalingam
Stills — G Anand Kumar
DI — Infinity Media
Colorist — Srinath B
Makeup — N Sakthivel
Costumer — Nagu
Publicity Design — Aesthetic Kunjamma
PRO — Rekha
Direction Team — Odam Ilavarasu, Prabhakar, Thozhar Sathish, Dharani Guru, Mahins David Prince, Karthick Kannan V, Surya Gandhimathi
Cinematography Team — SR Santhosh Kumar, Karthick, Raja C Sekar, Jalendiravasan, Prabu Selvaraj, Karthik V, Nirmal G, Neeraj G
Editing Team — Ajith Kumar M, Kavimani, M.S. Anbu Mathi
Art Team — GK. Jagan, S. Bavi Dharani, Vasuki Velmurugan, Gnanavel Angamuthu
Production Managers Team — Dindigul V Sivaraman, K Veeramani, Hariharan, Santhosh
Dubbing Engineers — Rashid J, Venkat C Balaram

‘மண்டாடி’ மீனவ மக்களின் வாழ்க்கையையும் பாய்மர படகு போட்டியையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் மண்டாடி. தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகவைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளி 20 வருடங்களுக்கு முன்பு சில காரணங்களால் ஊரை விட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் தனது முன்னாள் காதலியின் மகன் மாரியை காப்பாற்றுவதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு அவருடைய பழைய நண்பனாக இருந்த சட்டாப்புலியுடன் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன, முத்துக்காளி ஏன் ஊரை விட்டு சென்றார், இறுதியில் பாய்மர படகு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

முத்துக்காளியாக நடித்திருக்கும் சூரி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக பார்த்த சூரி இப்போது ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் தெரிகிறார். கோபம், பாசம், காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளிலும் படகு போட்டிக்கான பயிற்சி காட்சிகளிலும் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது.

சுஹாஸ் சட்டாப்புலி கதாபாத்திரத்தில் சூரிக்கு சரியான போட்டியாக நடித்திருக்கிறார். அவரது கோபம், வன்மம் மற்றும் கதாபாத்திரத்தின் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.

மகிமா நம்பியாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல், பிரிவு மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டு காலகட்டங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சத்யராஜ் அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மிதுன் ஜெய்சங்கர் மாரி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ரவீந்திர விஜய், ராம்ஸ், ஸ்டண்ட் சிவா, பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. எஸ் ஆர் கதிர் கடல், படகுகள், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டி காட்சிகளை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். கடலில் நடக்கும் போட்டியை திரையில் பார்க்கும்போது நாமும் அந்த போட்டிக்குள் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. பாய்மர படகு போட்டிக்காக படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பு தெளிவாக தெரிகிறது.

ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை போட்டி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நல்ல வேகத்தை கொடுக்கிறது. பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது.

படத்தொகுப்பு படத்தின் இன்னொரு பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் படகு போட்டி காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்திருக்கிறார்கள். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ ஆகியோரின் சண்டைப்பயிற்சியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மீனவ மக்களின் வாழ்க்கையையும் கடலையும் ஒரு புதிய களத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படகு போட்டியின் விதிகள் மற்றும் அதன் பின்னணியை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களின் சில பகுதிகள் ஏற்கனவே பார்த்த ஸ்போர்ட்ஸ் படங்களை நினைவுபடுத்துகின்றன. நட்பு, துரோகம், காதல், பழைய பகை போன்ற விஷயங்களில் பெரிய புதுமை இல்லை.

முதல் பாதி வேகமாக செல்கிறது. முத்துக்காளி ஊருக்கு திரும்புவது, மாரியை காப்பாற்றுவது, புதிய அணியை உருவாக்குவது மற்றும் போட்டிக்காக பயிற்சி கொடுப்பது என அடுத்தடுத்து சம்பவங்கள் நடப்பதால் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பழைய கதையை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வருவதால் சில இடங்களில் வேகம் குறைகிறது. இந்த பகுதி சற்று நீளமாக இருப்பது ஒரு குறையாக தெரிகிறது.

ஆனால் கிளைமாக்ஸ் அந்த குறைகளை பெரிதாக தெரியவிடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் செல்லும் படகு போட்டி காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கடைசி வரை நம்மை போட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். படகு போட்டியை விரும்புபவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், ‘மண்டாடி’ சூரியின் ஆக்ஷன் அவதாரத்தை பார்க்க விரும்புபவர்களும், வித்தியாசமான படகு போட்டி களத்தை ரசிக்க விரும்புபவர்களும் மண்டாடியை நம்பி பார்க்கலாம்.

Categories
Cinema News

DRISHYAM THE CONCLUSION, IN CINEMAS ON 2ND OCTOBER

DRISHYAM THE CONCLUSION, IN CINEMAS ON 2ND OCTOBER “Drishyam The Conclusion”

INDIA’S MOST LOVED FAMILY THRILLER FRANCHISE HEADS TOWARDS ITS EPIC FINALE WITH DRISHYAM THE CONCLUSION, IN CINEMAS ON 2ND OCTOBER

Directed by Abhishek Pathak, the final chapter continues from where Drishyam 2 left off but features a fresh story and an entirely new screenplay.

The truth has remained buried, the Salgaonkar family has held its ground, and Vijay Salgaonkar has stayed one step ahead. But this time, the State is coming for him with renewed force.

Over the years, Drishyam has grown beyond blockbuster films to become one of Indian cinema’s most loved and celebrated family thriller franchises. Vijay Salgaonkar’s world has kept audiences hooked, sparked endless theories and conversations, and had millions rooting for him every step of the way. Now, with anticipation for the final chapter at an all-time high, the wait is finally over! The much-awaited trailer of Drishyam The Conclusion is here, setting the stage for the biggest battle yet. Ajay Devgn returns as the iconic Vijay Salgaonkar,but this time, Jaideep Ahlawat stands firmly in his way as SP Crime Branch Rajveer Singh Tomar, a formidable new force determined to uncover the truth once and for all.

Picking up from where Drishyam 2 left off, Drishyam The Conclusion takes the franchise into thrilling new territory with a fresh story and an entirely new screenplay. As Rajveer Singh Tomar takes charge of the seemingly impossible case, Vijay finds himself facing one of his most relentless challenges yet. Prakash Raj raises the stakes further, while Tabu, Shriya Saran and Rajat Kapoor return to a world where the past refuses to stay buried. With old secrets resurfacing, unanswered questions closing in and new forces entering the game, the trailer promises an electrifying battle of wits where every move could change everything.

Celebrating the franchise’s scale, fandom and legacy, the makers brought Drishyam The Conclusion back to where it all began: Goa, the world synonymous with Vijay Salgaonkar and his unforgettable story. The trailer launch became an immersive Drishyam experience, taking the media and influencers through iconic locations from the films, reliving memorable moments and stepping straight into Vijay Salgaonkar’s world, before culminating in a grand trailer unveiling in Panaji with the cast and makers. The cast Ajay Devgn, Tabu, Shriya Saran, Rajat Kapoor, Jaideep Ahlawat and Mrunal Jadhav graced the occasion along with Director, Writer and Producer Abhishek Pathak and producer and Head — Hindi & English Entertainment (Streaming, TV & Studios), JioStar – Alok Jain and producer and Head of Star Studio18 Ajit Andhare and Producer Kumar Mangat.

Directed by Abhishek Pathak, Drishyam The Conclusion stars Ajay Devgn, Tabu, Shriya Saran, Rajat Kapoor, Jaideep Ahlawat and Prakash Raj, Kamlesh Sawant, Ishita Dutta and Mrunal Jadhav among others bringing together a powerhouse ensemble for the ultimate chapter of the celebrated franchise.

Presented by Star Studio18, the Panorama Studios production is directed by Abhishek Pathak and written by Abhishek Pathak, Aamil Keeyan Khan and Parveez Shaikh. Produced by Alok Jain, Ajit Andhare, Kumar Mangat Pathak and Abhishek Pathak, Drishyam The Conclusion is all set to release theatrically on 2nd October 2026.

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் குடும்பத் த்ரில்லராக உள்ளது. விஜய் சல்காவோங்கரின் உலகம் பார்வையாளர்களை கவர்ந்ததுடன், பல விவாதங்களையும் உருவாக்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில், இறுதி அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ’த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சல்காவோங்கராக அஜய் தேவ்கன் மீண்டும் நடிக்கிறார். ஆனால், இந்த முறை அவருக்கு எதிராக, உண்மையை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன், குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜ்வீர் சிங் தோமராக ஜெய்தீப் அஹ்லாவத் களமிறங்குகிறார். விஜய்க்கு எதிரான வலிமையான சக்தியாக அவர் உருவெடுக்கிறார்.

‘த்ரிஷ்யம்2’ முடிந்த இடத்திலிருந்து தொடங்கும் ’த்ரிஷயம் தி கன்குலூஷன்’, புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையின் மூலம் இந்த பாகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. சாத்தியமே இல்லை எனத் தோன்றும் இந்த வழக்கை ராஜ்வீர் சிங் தோமர் கையில் எடுக்கும்போது, விஜய் இதுவரை சந்தித்திராத அளவுக்கு கடுமையான சவாலை எதிர்கொள்கிறார். பிரகாஷ் ராஜின் வருகை கதையின் பரபரப்பை மேலும் அதிகரிக்கிறது. தபு, ஸ்ரியா சரண் மற்றும் ரஜத் கபூர் ஆகியோரும் மீண்டும் இந்த உலகிற்குத் திரும்புகின்றனர். கடந்த காலத்தின் ரகசியங்கள் மீண்டும் வெளிவர, விடை கிடைக்காத கேள்விகள் நெருங்கி வர, புதிய சக்திகள் களத்தில் இறங்குகின்றன. ஒவ்வொரு நகர்வும் அனைத்தையும் மாற்றக்கூடிய சூழலில், புத்திசாலித்தனத்திற்கும் தந்திரத்திற்கும் இடையிலான மோதலை டிரெய்லர் காட்டுகிறது.

’த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ’த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு, இந்தக் கதை தொடங்கிய இடமான கோவாவில் நடைபெற்றது. விஜய் சல்காவோங்கர் மற்றும் அவரது கதையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு பிரத்யேகமாக இந்தத் திரைப்பட அனுபவம் வழங்கப்பட்டது. திரைப்படங்களின் முக்கியமான தருணங்களை மீண்டும் நினைவுகூர்ந்தபடி, விஜய் சல்காவோங்கரின் உலகிற்குள் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் நிறைவாக, பனாஜியில் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் மிருணாள் ஜாதவ் ஆகிய நடிகர்களுடன், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் அபிஷேக் பதக், ஜியோஸ்டாரின் இந்தி மற்றும் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவின் (ஸ்ட்ரீமிங், டிவி & ஸ்டுடியோஸ்) தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அலோக் ஜெயின், ஸ்டார் ஸ்டுடியோ18 நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அஜித் அந்தாரே மற்றும் தயாரிப்பாளர் குமார் மங்கத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேக் பதக் இயக்கியிருக்கும் ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ், கமலேஷ் சாவந்த், இஷிதா தத்தா மற்றும் மிருணாள் ஜாதவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்டார் ஸ்டுடியோ18 வழங்கும் இப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அபிஷேக் பதக், ஆமில் கீயான் கான் மற்றும் பர்வீஸ் ஷேக் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர்.

அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரித்துள்ள ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படம், அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Categories
General News

Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar

Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar.

Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar, Reinforcing Its Dominance in Tamil Entertainment

Endemol Shine India’s Bigg Boss Tamil hosted by Actor Vijay Sethupathi, continues to dominate the Tamil entertainment landscape, securing the #1 position on JioHotstar in the Tamil category.

The latest ranking reflects the massive audience interest and engagement surrounding Bigg Boss Tamil, with the show continuing to drive conversations across television, digital platforms and social media.

The #1 position further strengthens Bigg Boss Tamil’s standing as one of the most powerful reality entertainment properties in the Tamil market, demonstrating its deep and consistent connect with audiences across Tamil Nadu.

The achievement also highlights the strength of Endemol Shine India, part of Banijay Asia, which produces the Bigg Boss franchise in India. With its expertise in adapting globally successful formats for diverse Indian audiences, Endemol Shine India has built Bigg Boss into a powerful multi-market entertainment franchise.

With Bigg Boss currently holding the #1 position across multiple language markets on JioHotstar, the franchise continues to demonstrate its exceptional pan-India appeal, while Bigg Boss Tamil’s #1 position reinforces its stronghold among Tamil audiences. The South Indian crowds are spellbound over the ‘Bigg Boss South Carnival’ this year as it got started on the same day. Adding more intrigue to the inaugural show was the Eminent Hosts of respective languages – Mohanlal (Malayalam), Nagarjuna (Telugu), Kichha Sudeep (Kannada) and Vijay Sethupathi (Tamil) appearing together from their respective shows and wishing each other for the grand success.

எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’, ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்திய தரவரிசையின்படி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி முதலிடத்தை பிடித்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரிய வரவேற்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவும் ‘பிக் பாஸ் தமிழ்’ இருந்து வருகிறது.

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் பிக் பாஸ் தமிழ் முதலிடத்தைப் பிடித்திருப்பது, தமிழ் மார்க்கெட்டில் மிகவும் வலுவான ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தொடர்ந்து வருவதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நெருக்கமாக இருப்பதையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வெற்றி, பனிஜே ஏசியாவின் ஒரு பகுதியாக செயல்படும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் ‘பிக் பாஸ்’ பிரான்சைஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் எண்டெமோல் ஷைன் இந்தியா, உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களை இந்தியாவின் பல்வேறு மொழி மற்றும் பிராந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு உருவாக்குவதில் சிறப்பான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல்வேறு சந்தைகளில் வலுவான பொழுதுபோக்கு பிரான்சைஸாக எண்டெமோல் ஷைன் இந்தியா உருவாக்கியுள்ளது.

தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பல்வேறு மொழிப் பிரிவுகளில் பிக் பாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்த பிரான்சைஸ் நிகழ்ச்சி நாடு முழுவதும் தனக்குள்ள அபாரமான வரவேற்பை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதேவேளையில், ‘பிக் பாஸ் தமிழ்’ முதலிடத்தைப் பிடித்திருப்பது, தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்குள்ள வலுவான வரவேற்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஒரே நாளில் தொடங்கிய ‘பிக் பாஸ் சவுத் கார்னிவல்’ நிகழ்ச்சியால் தென்னிந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடக்க நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில், அந்தந்த மொழிப் பதிப்புகளின் பிரபல தொகுப்பாளர்களான மோகன்லால் (மலையாளம்), நாகார்ஜுனா (தெலுங்கு), கிச்சா சுதீப் (கன்னடம்) மற்றும் விஜய் சேதுபதி (தமிழ்) ஆகியோர் தங்களது நிகழ்ச்சிகளில் இருந்து ஒன்றாகத் தோன்றி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ‘பிக் பாஸ் சவுத் கார்னிவல்’ நிகழ்ச்சி பிரமாண்ட வெற்றியடைய வாழ்த்தினர்.

Categories
Cinema News

‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.

இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ

80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.

மகளை கொண்டாடும் அழகான பாடல்

ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.

சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

*Baththa’ First Single ‘Magale’! A Beautiful Melody That Gently Touches the Heart!*

The musical sensation Sai Abhyankkar endows a soulful musical dimension with ‘Magale’, the first single from Vijay Sethupathi’s ‘Baththa’

The first single ‘Magale’ from ‘Baththa’, starring Makkal Selvan Vijay Sethupathi and directed by Balaji Tharaneetharan, has been released and is receiving a warm response from music lovers. Presented by filmmaker Atlee, the film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production. Composed and sung by Sai Abhyankkar, the song features lyrics by acclaimed lyricist Karthik Netha.

Celebrated by today’s generation for his energetic and instantly appealing music, Sai Abhyankkar takes a refreshingly different musical route with ‘Magale’, embracing a tender and soothing melody. What adds more intrigue to the song is that the track exhibits a distinctly different side of the composer, moving away from his familiar youthful exuberance and creating a gentle musical experience that lingers with the listener.

A Refreshing Visual  That Recreates the Musical World of the 1980s

 With the visual and musical aesthetics of the 1980s once again finding its place among audiences, the video song of ‘Magale’ beautifully recreates the atmosphere of that era. From its very opening, the song commutes  viewers into an old-school recording studio, evoking the way a film song could have been recorded during the 1980s.

The vintage studio setting, period recording techniques and carefully recreated ambience add a distinct charm to the video. Another highlight is Sai Abhyankkar appearing as both the composer and singer, adding an interesting visual dimension to the song.

Beautiful Poetic Dedication to Daughter

A Heartfelt Musical Tribute to the Bond Between a Father and Daughter, built around the tender emotions of a father expressing his affection towards his daughter, ‘Magale’ beautifully celebrates the warmth and unconditional love of this special bond. Karthik Netha’s poetic lyrics further deepen the emotional essence of the song, giving it the feel of an affectionate musical ode to a daughter.

Sai Abhyankkar’s gentle composition and soulful vocals blend beautifully with Karthik Netha’s evocative writing, turning ‘Magale’ into a soothing listening experience. His departure from his signature high-energy style to explore a delicate melodic space has emerged as one of the song’s most refreshing aspects.

Arriving as a distinctive musical offering, ‘Magale’ has already begun winning the appreciation of listeners, further adding to the anticipation surrounding ‘Baththa’.

Starring Vijay Sethupathi and Lijomol Jose in the lead roles, ‘Baththa’ is directed by Balaji Tharaneetharan and presented by Atlee. Sai Abhyankkar composes the music, with Selvakumar S.K. handling cinematography, R. Kalaivanan taking care of editing and T. Muthuraj as Production Designer. The film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production.

‘Baththa’ is scheduled for a worldwide theatrical release on October 1, 2026.

LINK : https://www.youtube.com/watch?v=FhhA5purigQ

Categories
Cinema News

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’.

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’*l.

*#சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*

*சூர்யாவின் ‘சீன்-SCENE’ படத்தின் டைட்டில் & டைட்டிலுக்கான டீசர் வெளியீடு*


ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சீன்- SCENE ‘ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அஜ்மல் ஷபு மேற்கொள்ள கலை இயக்கத்தை அஸ்வினி காலே கையாண்டிருக்கிறார். காமெடி வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு ‘சீன்- SCENE ‘என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யாவின் இன்பராஜ் ஐபிஎஸ்ஸின் கதாபாத்திர தோற்றம் – அவரின் திரை ஆளுமை – உரையாடல் – பின்னணி இசை- அனைத்தும் மாஸாக இருப்பதால்.. ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியாகிறது என்பதால்.. ரசிகர்களுக்கு ‘ஹாட்ரிக் டமாக்கா’ என கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூர்யா… ஹாட்ரிக் வெற்றியை ‘சீன்- SCENE ‘ மூலம் வழங்குவதற்காக தயாராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Press Release

*Suriya’s ‘SCENE’ to Release on Deepavali*

*Title and Release Date of Suriya 47 Announced*

*Title Teaser of Suriya’s ‘SCENE’ Released*

Produced by Zagaram Studios and 2D Entertainment, and directed by Jithu Madhavan, Suriya’s much-awaited Suriya 47 has been titled ‘SCENE’. The title teaser of the film has been released, along with the announcement that the movie will have a worldwide theatrical release on November 6, 2026, coinciding with the Deepavali festival.

Directed by Jithu Madhavan, ‘SCENE’ features Suriya, Nazriya Nazim, Naslen, Anand Raj, Lal, Raj Priyan and others in prominent roles.

The film has Vineeth Agustine as the cinematographer, while music is composed by Sushin Shyam. Ajmal Sabu is handling the editing, and Ashwini Kale is the production designer.

Positioned as an action comedy entertainer, the film is jointly produced by Jyothika and Suriya under the banners of Zhagaram Studios and 2D Entertainment Studios. Jayashree Damodaran serves as the co-producer.

As the post production work on the film progresses at a brisk pace, the makers have officially unveiled the title ‘SCENE’ along with an exclusive title teaser.

The teaser has already created excitement among fans, showcasing Suriya’s character Inbaraj IPS, his commanding screen presence, powerful dialogue delivery and Sushin Shyam’s electrifying background score. The announcement of the film’s November 6 Deepavali release has further elevated the anticipation, with fans celebrating it as a ‘hat-trick dhamaka.’

Meanwhile, Suriya, who is set to entertain audiences with ‘Karuppu’ and ‘Viswanath & Sons’, is gearing up to deliver another memorable outing with ‘SCENE’, aiming to complete a hat-trick of successes.

‘SCENE’ releases worldwide in theatres on November 6, 2026, for Deepavali.